Social Icons

Pages

Featured Posts

Sunday, 20 October 2013

Horror In Nagarcovil news below:

நாகர்கோவிலில் 10 மாதங்களுக்கு முன்பு இறந்து போன பெண்ணின் சடலத்தை இன்று வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்தனர். சடலத்துடன் 10 மாதமாக வசித்த அந்த பெண்ணின் தாய், சகோதரர் மற்றும் மகன் மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் ராமவர்மா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியர். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரோஜினி (89). இவர்களுக்கு உமாதேவி (56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை (53) என்ற மகன்களும் உண்டு. உமாதேவியின் கணவர் தாணுப்பிள்ளை. குடும்ப தகராறு காரணமாக மகன் சிவராமனுடன், ராமவர்மா புரத்தில் உள்ள தாய் வீட்டில் உமாதேவி வசித்தார். பெருமாளும் திடீரென இறந்து போக, வீட்டில் சரோஜினி, செல்வம் பிள்ளை, உமாதேவி, அவரது மகன் சிவராமன் ஆகியோர் மட்டுமே வசித்து வந்தனர். இவர்கள் அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசுவதில்லை. வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் உமாதேவி இறந்திருக்கிறார். ஆனால் அவரது உடலை வீட்டில் இருந்தவர்கள் துணியில் கட்டி ஒரு அறைக்குள் பூட்டிவிட்டனர். இறந்து போன சுப்பிரமணிய பிள்ளையின் பென்ஷன் பணம் மட்டுமே இவர்களின் குடும்ப வருமானமாக இருந்தது. சமீபத்தில் பென்ஷனுக்கான உயிர் வாழ் சான்றிதழை இவர்கள் சமர்ப்பிக்காததால், பென்ஷனும் நின்று போனது. இதனால் வீட்டுக்கு அருகே வசிக்கும் சாந்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளனர். சாந்தியின் மகன் ரூ.500 கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஓட்டலில் செல்வம் பிள்ளை சாப்பாடு வாங்கி வந்தார். அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, பாத்திரத்தில் சாந்தி தண்ணீர் கொண்டு சென்றார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வந்ததை சாந்தி அறிந்து வெளியில் பதற்றத்துடன் வந்து விட்டார். இதுகுறித்து போலீசில் அவர் தகவல் அளித்தார். உடனே டவுன் டிஎஸ்பி உதயகுமார் தலைமையில் கோட்டாறு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 10 மாதங்களுக்கு முன்பு இறந்து போன உமாதேவியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த 3 பேரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் இருந்ததால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை நடத்த டாக்டர்களை அனுப்பி வைக்குமாறு, மருத்துவ கல்லூரி முதல்வரிடம் இன்று காலை கடிதம் அளித்தனர். அதன்படி டாக்டர்கள் வந்து பிரேத பரிசோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சடலம் இருந்தால் கருப்பு உருவம் வராது? வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விவரம் கேட்ட போது யாரும் பேசவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு செல்வம் பிள்ளை மட்டும், எனது தந்தை ஏதோ உருவத்தை பார்த்து இறந்து போனார். எனது சகோதரர் பெருமாள், எனது சகோதரி உமாதேவியும் அந்த உருவத்தை பார்த்து இறந்து போனார்கள். நானும் அந்த உருவத்தை பார்த்தேன். ஆனால் சாகவில்லை. சடலம் இருந்தால் உருவம் வராது என்றார். மற்றப்படி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. செல்வம் பிள்ளை பி.டெக் முடித்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார். - See more at: http://www.tamilspace.com/2013/10/10-months-after-girl-body.html#sthash.U2xwV4TN.dpuf
AArambam movie new news about Arya and tapsi:

‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக 

அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித். ‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் 

ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா. இந்த மாதிரியான விஷயங்களில் மத்த 

ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க  ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் 

என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி 

எடுத்து விடுகிறார்கள். இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் 

ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘வீரம்’ படத்தின் 

படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் 

செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக 

போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம். 

அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு  படத்துல உங்க 

நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் 

சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல 

இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம். - See more at: 

Friday, 18 October 2013

Monkey like a man!!!



மார்மோப்ஸட் இனத்தைச் சார்ந்த குரங்குகள் மனிதர்களைப்போல உரையாடிக்கொள்வதாக 

ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  'உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோப்ஸட்கள் 8 

அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஒன்றுக்கொன்று 

உரையாடிக்கொள்கின்றன' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் 

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறியது: "இவற்றின் உரையாடல்கள் பறவை, 

தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித 

உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோப்ஸட் குரங்குகள் சிம்பன்ஸி மனிதக் 

குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன. 

ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு உரையாடல் சப்தங்களை எழுப்புவது 

ஆகியவற்றில் மனிதர்களுடன் ஒத்துள்ளன' என்றார்.
சூர்யா-ன் புதிய படத்தின் தகவல்கள் :


லிங்குசாமி,சூர்யா,சமந்தா ஆகியவர்களின் புதிய கூட்டணியில் வரவிருக்கும்

பெயரிடபடாத படத்தை குறித்து மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி

உள்ளன. இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் வெளிவரபோவதாகவும் சில

தகவல்கள் வெளிவந்தது. தற்போது மேலும் சுவாரசியமான தகவல்கள்

வெளியாகி உள்ளன.DRAGON CAMARA digital என்னும் புதிய தொழில் நுட்ப

CAMARA பயன்படுத்தபட்டுள்ளது.

மேலும் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என இந்த

படத்தின் cinematographer தெரிவித்து உள்ளார். இந்த படம் ஒரு புதிய

முயற்சியாக அமையும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார் .

படத்தின் சோதனை படங்கள் (test shoot) சென்னை-இல் நடைபெற்றது . 

photo's:












சிம்புவுக்கு அக்கவாக கனவுகன்னி:

ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் தொடையழகி ரம்பா. பின்னர் தொழிலதிபர் ஒருவரை மணந்து வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
தற்போது இரண்டரை வயதில் குழந்தை உள்ளது ரம்பாவிற்கு. இந்நிலையில் தனது அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடியாகி விட்டாராம் ரம்பா. சிம்புவின் அக்காவாக தமிழ் எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இனி, அக்கா, அண்ணி போன்ற நல்லா கதாபாத்திரங்கள் மட்டுமே இவரது பெஸ்ட் சாய்ஸாக இருக்குமாம்.
தமிழ் போலவே தெலுங்கிலும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளாராம் ரம்பா. கணவரைப் பிரிந்ததே ரம்பாவின் திரைஉலக மறு பிரவேசத்திற்கு காரணம் என சொல்லப் படுகிறது.







தெலுங்கில் அஜித்தின் ஆட்டம் ஆரம்பம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தெலுங்கில் அஜித் படங்களுக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கூட்டமே இருக்கிறது.
அஜித் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே அங்கே சூப்பர்டூப்பர் ஹிட். அதனால் இப்போது அவர் நடித்துவரும் ஆரம்பம் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
மேலும் ஆந்திரா ரசிகர்களின் கனவுக்கன்னியான நயன்தாராவும் கனவுக்கன்னியாக முயற்சித்துவரும் டாப்ஸியும் இந்தப்படத்தில் இருப்பதால் படம் தெலுங்கிலும் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.
தெலுங்கில் இந்தப்படத்திற்கு ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைத்திருக்கிறார்கள்.
முதலில் தமிழில் கூட ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைப்பதாகத்தான் இருந்தது.
அனேகமாக அக்டோபர் முதல் வாரத்தில் தெலுங்கில் ஆட்டம் ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவனின் இசைக்கென்றே ஒரு ரசிகர்கூட்டமும் ஆந்திராவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Sample text

Sample Text

Sample Text